கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி விபத்து: 3 மாணவிகள் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 8 Second
சென்னை கிண்டி மேம்பலம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கிண்டி புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக கிண்டி, கத்திபாரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating