நடத்தையில் சந்தேகம்: தலையை சுவற்றில் மோதி மனைவியை கொன்ற கணவன்…!!

Read Time:2 Minute, 21 Second

201610131607040071_suspicious-behavior-husband-who-killed-his-wife-and-hit-her_secvpfசேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் இவரது மனைவி அல்லி(வயது 22) இவர்களுக்கு சதாசிவம்(4), சிவா(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 5 மாதத்துக்கு முன்பு வெங்கடாச்சலம் தனது மனைவி மற்றும் மகன்களுடன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரைக்கு வந்து குடியேறினார். அங்குள்ள கல் உடைக்கும் நிறுவனத்தில் கணவனும், மனைவியும் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் அல்லியின் நடத்தையில் வெங்கடாச்சலத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

மேலும் வேலைக்கும் சரியாக செல்ல வில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் வெங்கடாச்சலம் நேற்று இரவு குடித்து விட்டு வந்தார். குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அல்லியை எழுப்பி தகராறு செய்தார்.

அப்போது அவர் அல்லியின் தலையை சுவற்றில் பலமுறை மோதினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெங்கடாச்சலம் ஊர் தலைவரிடம் கூறினார். அவர் வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் விரைந்து வந்து வெங்கடாச்சலத்தை கைது செய்தனர்.

பின்னர் அல்லியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் இறந்து கிடப்பதைப்பார்த்து சிறுவர்கள் தேம்பித் தேம்பி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயிலம் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற 12 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…!!
Next post பெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்?