பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி பலியான விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 2 பேர் கைது..!!
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களது மகள் லோகமுத்திரா (வயது 10). இவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 7-ம் தேதி பள்ளி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.
பள்ளி மாணவி கீழே விழுந்ததற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என கூறி லோகமுத்திராவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளியின் முதல்வர் அமல்ராஜ்(62) மற்றும் பள்ளியின் மேலாளர் பார்த்திபன்(33) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கவனகுறைவாக செயல்பட்டது தான் மாணவி லோகமுத்திரா சாவுக்கு காரணம் என போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Average Rating