தென்கொரியா: சுற்றுலா பேருந்து சாலை தடுப்பில் மோதி தீபிடித்தது – 10 பேர் பலி…!!
Read Time:1 Minute, 12 Second
தென்கொரியாவில் உள்ள பிரபல ரசாயன தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிலர் தங்களது குடும்பத்தாருடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஒரு சுற்றுலா பஸ்சில் நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
நாட்டின் தென்கிழக்கு பகுதியான உல்சான் நகரை நோக்கி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் திடீரென தீபிடித்து எரிந்தது. உள்ளே சிக்கிகொண்ட பயணிகள் வெளியேற வழியின்றி தீயில் எரிந்து கருகினர்.
இவ்விபத்தில் பத்துபேர் உயிரிழந்ததாகவும், ஒன்பதுபேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Average Rating