யாழ் நெடுந்தீவு இளைஞன் பரிதாபமாக பலி…!!
Read Time:1 Minute, 4 Second
யாழ் நெடுந்தீவில் இன்று இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேசப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தர்மதுரை பகீரதன் (24 ) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறிந்த இளைஞர் யாழ் பகுதியில் இருந்து ஏ9 பிரதான வீதியில் பயணம் செய்துள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடு இழந்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதியுள்ளது.
இதன் காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இளைஞர் மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating