பாடசாலை உடையுடன் கஞ்சா :பிரபல பாடசாலை மாணவர்கள் கைது…!!
Read Time:1 Minute, 16 Second
கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த 8 பிரபல பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் தெல்தெனிய, ஒருதொட்ட, பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த போது தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒருவருக்கு 25,000 ரூபா சரீரப் பிணை வழங்கப்பட்டு சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, மெணிஹின்ன மற்றும் கென்கல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating