திருப்பதி அலிபிரி நடைபாதையில் வந்த தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் பலி..!!

Read Time:1 Minute, 29 Second

201610141652477104_two-devotees-killed-in-heart-attack-in-tirupati-temple_secvpfதிருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அலிபிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலையில் ஏறி கொண்டிருந்தபோது, ஒரு தரிசன பக்தருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு பின்னால் வந்த மற்றொரு பக்தருக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர்.

அங்கிருந்த ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இரு பக்தர்களும் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறினர்.

இதுகுறித்து திருமலை 2-டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், இரு பக்தர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களை பற்றிய முழு விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து…!!
Next post பெண் குளித்ததை படம் பிடித்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்…!!