பெண் குளித்ததை படம் பிடித்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்…!!
ஆரணி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 35) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர் வீட்டை சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் அங்கு வந்தார். ராணி குளித்துக் கொண்டிருந்த இடத்தின் அருகே சுவரில் ஏறினார்.
அங்கிருந்து ராணிக்கு தெரியாமல் அவர் குளிப்பதை முனியாண்டி செல்போனில் படம் பிடித்தார். பின்னர் தான் படம் பிடித்து வைத்திருப்பதை ராணியிடம் கூறினார்.இதை கேட்ட ராணி அதிர்ச்சி அடைந்தார். படத்தை அழித்துவிடும்படி ராணி மன்றாடினார். ஆனால் முனியாண்டி கேட்பதாக இல்லை.
மாறாக அந்த படத்தை காட்டி ராணியை உல்லாசத்துக்கு அழைத்தார். உல்லாசத்துக்கு வராவிட்டால் குளியல் படத்தை பலருக்கும் காட்டி விடுவதாக மிரட்டினார்.
இந்த மிரட்டலுக்கு ராணி பணியவில்லை. இருந்தபோதிலும் முனியாண்டியின் மிரட்டலும், பாலியல் தொல்லையும் அதிகரித்தது.
எனவே இது தொடர்பாக களம்பூர் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.
முனியாண்டிக்கு உடந்தையாக செயல் பட்டதாக அவரது மனைவி உமாவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating