முழங்காலில் காயம் – மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை…!!
Read Time:1 Minute, 21 Second
காத்தான்குடி ஆரையம்பதியை பிறப்பிடமாகவும், மூதூர் பட்டித்திடல் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட டி ஜேசுதாஸ் (52) வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லா தெரிவித்தார்.
உயிரிழந்தவர் ஒரு பெண் பிள்ளையின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் தற் கொலை செய்யும் முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தொன்றில் முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இவரது சடலம் தற்போது மூதூர் தள வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating