தாய்லாந்து மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…!!
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் மன்னரின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து மன்னரின் மரணம் பெரும் கவலையளிப்பதாக ஜனாதிபதி இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த இரங்கல் செய்தியில்,
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள தாய்லாந்து மன்னரினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன்னரின் தூர நோக்குடனான பொருளாதார கொள்கைகளினால் தாய்லாந்து உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டது எனவும் குறிப்பிட்டார்.
வறுமை ஒழிப்புக் கொள்கைகளில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என போற்றியுள்ளார்.
மேலும், தாய்லாந்து மக்களுக்கும் நாட்டுக்கும் சுயநலமற்ற நோக்கில் அர்ப்பணிபுடன் செயற்பட்ட மிகச் சிறந்த தலைவரை அந்த நாடு இழந்துள்ளதாக ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating