பஸ் சில்லுக்குள் சிக்குண்டு ஒருவர் பலி….!!
Read Time:50 Second
கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்ற போது தவறி விழுந்த நிலையி்ல் பஸ் சில்லுக்குள் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating