களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் பலி…!!
Read Time:55 Second
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கதக்க பி.மஹிந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிதுல்கலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating