கிளிநொச்சியில் கூரிய ஆயுதங்களுடன் பாடசலைக்கு சென்ற மாணவன்…!!
Read Time:1 Minute, 19 Second
கிளிநொச்சியில் பிரதான பாடசலை ஒன்றுக்கு கூரிய ஆயுதங்களுடன் சென்ற மாணவன் ஒருவரை பாடசாலை நிர்வாகம் மாவட்டச் சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.
குறித்த சிறுவனை குறித்த அதிகாரி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த சிறுவனை அச்சுவேலியில் உள்ள சான்று பெற்ற பாடசாலையில் பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மற்றுமொரு சிறுவன் ஒருவர் அச்சுவேலியில் உள்ள சான்றுபெற்ற பாடசாலையில் வைத்து பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை குறிக்பிடத்தக்கது.
Average Rating