தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர்கள் கைது…!!
Read Time:1 Minute, 7 Second
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு, லோகுரு வீதி பிரதேசத்தில் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கல்னேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கடந்த மாதம் 17 ஆம் திகதி தங்க ஆபரணங்களை தயாரிக்கும் நிறுவனத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை தடுத்து வைத்து விட்டு தங்க ஆபரணங்களையும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து , கல்னேவ மற்றும் கேகாலை பிரதேசங்களை சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Average Rating