சிகரெட் கடத்தல் ; ஒருவர் கைது…!!
Read Time:58 Second
சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட சிகரெட் பைக்கெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 3.00 மணிக்கு துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குறித்த சிகரெட் பைக்கெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த நபரிடமிருந்து 15 இலட்சம் பெறுமதியான 35,800 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான நபர் கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating