பத்து நிமிடத்தில் பல்வலி குணமாக வேண்டுமா?
பொதுவாக நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு மற்றும் இடைவேளைகளில் பசி எடுக்கும் போது சில பாஸ்புட் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றோம்.
இதனால் நமது பற்கள் அதிகப்படியான கிருமிகள் மூலம் தாக்கப்பட்டு பூச்சி பற்கள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு நாம் தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளிலும் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.
சாப்பிட்ட பின் வாயை நன்றாக தண்ணீரில் கொப்பளிக்க வேண்டும். அப்போது நாம் சாப்பிட்ட துகள் அனைத்தும் வெளியேறி விடுகிறது.
மேலும் இரவு நேரங்களில் சாப்பிட்டவுடன் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் நம் பற்கள் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து தடுக்கப்பட்டு பற்களில் வலிகள் ஏற்படாது.
பல்வலிகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சிறிதளவு மிளகை எடுத்துக் கொண்டு அதை நன்றாக அரைத்து பொடி செய்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின் அந்த நீரை ஆறவைத்து, மிதமான சூட்டில் வலி இருக்கும் கண்ணத்தின் வெளிப்பகுதியில் இந்த நீரை தொட்டு நன்றாக தேக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பத்து நிமிடத்தில் பல் வலி காணாமல் போய்விடும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating