வவுனியாவில் அரச பேரூந்து மீது தாக்குதல்…!!
Read Time:1 Minute, 0 Second
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் போது பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தை மேற்கொண்ட குழுவில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இதேவேளை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் மது போதையில் இருந்ததாகவும், ஒருவர் தனியார் பேரூந்தொன்றில் பணிபுரிபவர் எனவும் அறியப்படுகிறது.
Average Rating