இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்…!!
Read Time:1 Minute, 25 Second
சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான இலங்கையர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இலங்கையரிடம் எவ்வித பயண ஆவணங்களும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவரே இவ்வாறு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating