ஆரையம்பதியில் மோட்டார் குண்டு மீட்பு….!!
Read Time:50 Second
மட்டக்களப்பு – ஆரையம்பதியில் இருந்து இன்று மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி நரசிமராவ் ஆலய வீதியிலுள்ள வீடொன்றிற்கு கொங்கிறீட் இடுவதற்காக குழி தோண்டிய போது இந்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டுரிமையாளர் வழங்கிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் 60 மில்லி மீற்றர் கொண்ட குறித்த குண்டை மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating