அடையாறில் பெண் என்ஜினீயர் வீட்டில் 70 சவரன் நகைகள் திருட்டு – வேலைக்கார பெண் ஓட்டம்…!!
Read Time:1 Minute, 18 Second
சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகர், 1-வது தெருவில் வசிப்பவர் ஐஸ்வர்யா (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவரது கணவர் பாஸ்கரும், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறார்.
இவர்கள் வீட்டில் பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா, சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த மன்னார்குடியைச் சேர்ந்த வடிவு என்ற வேலைக்கார பெண்தான் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்தது.
வேலைக்கார பெண்ணை பிடிக்க போலீசார் மன்னார்குடி விரைந்துள்ளனர்.
Average Rating