மர்ம புகைமண்டலம் எரிமலையா? காரணம் அம்பலம்…!!
Read Time:1 Minute, 9 Second
அண்மையில் கண்டி-தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் நிலத்தடியில் இருந்து புகை வந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
மண்ணிற்கு அடியில் உள்ள உக்கிய தாவரங்கள் மற்றம் விலங்கு கழிவுகள் தீ பிடித்தமையினாலேயே இவ்வாறு குறித்த பகுதியில் இருந்து புகை வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இடத்தில் 10 நாட்களாக நிலத்திற்கு கீழ் பகுதியில் இருந்து புகை வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்தே இவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புகை வர காரணம் என்னவென்று தெரியாத நிலையில் மக்கள் இது எரிமலையாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating