டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து வந்த தீபிகா படுகோனே…!!

Read Time:2 Minute, 14 Second

201610190819511604_deepika-padukone-dressed-in-television-program-worth-rs-10_secvpfகதாநாயகிகள் உடை விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுப்பார்கள். பட விழாக்கள், பேஷன் ஷோக்கள் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வருவார்கள். இதற்காக ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துக்கொள்வது உண்டு. அவர்கள் தயார் செய்து கொடுக்கும் ஆடைகளையே அணிந்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகள் பட விழாக்களில் விலை உயர்ந்த ‘பால்மெயின்’ வகை ஆடைகளை அணிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இந்த ஆடைகளை அவர்கள் அணிந்து மேடையில் தோன்றும்போது கூட்டத்தினர் பார்வை முழுவதும் அவர்கள் பக்கமே இருக்கும். இந்த வகை ஆடையை தீபிகா படுகோனே முதல் தடவையாக அணிந்து இந்தி பட உலகில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சல்மான்கானின் ‘பிக்பாஸ் 10’ டெலிவிஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனேவை அழைத்து இருந்தனர். அப்போது அவர் ஹாலிவுட் நடிகைகள் அணியும் ‘பால்மெயின்’ ஆடையை உடுத்தி வந்து இருந்தார். கருப்பு நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அது உருவாக்கப்பட்டு இருந்தது. பிரான்சு நாட்டில் இந்த ஆடையை வடிவமைத்து இருந்தனர். இந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம் ஆகும். தீபிகா படுகோனே ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலை நாடுகளில் விலை உயர்ந்த இந்த ‘பால்மெயின்’ ஆடைகள் புதிய பேஷனாக பிரபலமாகி வருகின்றன. அந்த ஆடையை அணிந்த முதல் இந்திய நடிகை என்ற பெயரை தீபிகா படுகோனே தட்டிச்சென்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது சிறுமியை கடத்திய திருடனை விரட்டி பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள்…!!
Next post வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!