ஏறாவூர் இரட்டைப்படுகொலை : சந்தேக நபர்களுக்கு இருவாரங்கள் விளக்கமறியல்…!!

Read Time:1 Minute, 51 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஏறாவூரில் கடந்த செப்டம்பர் மாதம் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் , அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த ‘வசம்பு’ என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் , பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் , பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் , ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் எம்.ஐ.எம். றிஷ்வி முன்னிலையில் மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளால் இந்தச் சந்தேகநபர்கள் அறுவரும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் நெரிசலில் சிக்கிய இரு அம்புலன்ஸ்! போராடும் உயிருக்கு வழிவிடுங்கள்…!!
Next post இடி, மின்னல் ஆபத்து! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை…!!