மெரினாவில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்து தீப்பிடித்தது: கணவன்-மனைவி, குழந்தை உயிர் தப்பினர்…!!

Read Time:1 Minute, 31 Second

201610191554557562_marina-near-motor-cycle-accident-3-people-escaped_secvpfமெரீனா கடற்கரையில் இன்று காலை மாட்டான் குப்பம் அருகே காமராஜர் சாலையில் மோட்டார்சைக்கிளில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து சாலையில் சறுக்கிக் கொண்டு சென்றது.

மோட்டார்சைக்கிளில் இருந்து கணவன், மனைவி, குழந்தை 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார்சைக்கிள் மற்றொரு புறத்தில் சறுக்கியபடி சென்றது.

இதில் திடீரென தீப்பிடித்து மோட்டார் சைக்கிள் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

உடனே 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதில் காயம் அடைந்த 3 பேரையும் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் எரிந்து தீயை அணைத்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒரு புறமும், 3 பேரும் மற்றொரு புறமும் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக காரமான மிளகாய் தின்றவர் தொண்டையில் ஓட்டை: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!
Next post சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!