மழையால் 50 வீடுகள் நீரில் மூழ்கின…!!
Read Time:1 Minute, 19 Second
கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக பெரண்டியாவத்தை பகுதியில் 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடிகாண் கட்டமைப்புக்கள் சீரின்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் இதனை அறிவித்துள்ளது.
இந்த வீடுகளுக்குள் சுமார் ஒரு அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவானது.
இன்று காலை 8.30 உடன் முடிவடைந்த 12 மணித்தியாலத்தில் அதிகபடியாக 59.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி இரத்மலானை பகுதியில் பதிவாகியுள்ளது.
கொழும்பில் 26.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating