சட்டவிரோத வர்த்தகத்திலீடுபட்ட 11 வர்த்தகர்கள் கைது…!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானமுறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைக்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறைகுறைந்த பாண் மற்றும் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, பாலமுனை, காத்தான்குடி, காங்கேயனோடை போன்ற பகுதிகளில் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் 50 வர்த்தக நிலையங்கள் நேற்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.
பேக்கரிகள், மீன்வியாபார நிலையங்கள், சில்லறை கடைகள், கருவாட்டுக்கடைகள், பழக்கடைகள், புடவைக்கடைகள் உட்பட வர்த்தக நிலையங்கள் குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
சந்தேக நபர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் மாவட்ட பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
Average Rating