களுவாஞ்சிகுடியில் மோதல்! இருவர் படுகாயம் – இருவர் கைது…!!

Read Time:1 Minute, 17 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2மட்டக்களப்பு – கண்ணகிபுரம், மகிழூர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தாம் இரகசிய விசாரணைப்பிரிவில் இருந்து வருகை தந்திருப்பதாக கூறிக்கொண்டு யசோதரன் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டினுள் நுழைந்தவர்கள் யசோதரனையும் வீட்டில் உள்ளவர்களையும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இவர்களை தாக்கி விட்டு தப்பியோடியவர்களின் மோட்டார் சைக்கிள் ஓந்தாச்சிமடத்தில் விபத்துக்குள்ளான நிலையில், வீதிப்போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்…!!
Next post பொலிஸார் சேறு பூசிக் கொண்டது ; ஜனாதிபதி…!!