யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஷேட பயணம்…!!

Read Time:2 Minute, 8 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-8வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கீரிமலை 100 வீட்டுத் திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வுக்காக இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த காணிகளின் விடுவிப்புக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பினை விடுக்கவுள்ளார்.

காணி விடுவிப்பிற்கான அறிவிப்பு வழங்கப்படும் அத்தினத்திலேயே குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சும் யாழ்.மாவட்டச் செயலகமும் இராணுவத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக இந்நிகழ்வுகளை நடாத்துவதற்காக மாவிட்டபுரப் புகுதியில் தற்போது ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்து.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து காணி விடுவிப்பிற்கான அறிவித்தலை விடுக்கும் ஜனாதிபதி ஏற்கனவே இனங்காணப்பட்ட பகுதிகளை தவிர வேறு சில மக்கள் குடியிருப்புக்கள் இராணுவ முகாம்கள் மற்றும்

படைமுகாம்களை அண்மித்துள்ள வீதிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினையும் ஜனாதிபதி விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியுடன் இருந்த இராணுவ சிப்பாய் மர்மமான முறையில் பலி…!!
Next post ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை…!!