அஞ்சுகிராமம் அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது…!!

Read Time:1 Minute, 27 Second

201610201822178466_youth-arrested-for-7th-girl-molested-near-anjugramam_secvpfஅஞ்சுகிராமத்தை அடுத்த அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற சிவா (வயது 35), கட்டிடத் தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் 12 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த தம்பதி பணம் எடுக்க அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் சிவா மாணவியிடம் சில்மி‌ஷம் செய்தார்.

வாலிபரின் நடவடிக்கையால் சிறுமி அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சிவா, ஓடிவிட்டார்.

இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறி, அழுதார். அவர்கள் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை நடத்தி சிவாவை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை…!!
Next post விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை முயற்சி: பள்ளி ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை…!!