போதையினால் ஏற்பட்ட விளைவு..! இலட்சம் ரூபா பெறுமதியான பொருள் நடு வீதியில்…!!
Read Time:1 Minute, 4 Second
வத்தளை ஒலிய முல்ல சந்தியில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று பாரியளவு சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி மது போதையின் இருந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி விபத்துக்குள்ளான வாகனத்தை நடு வீதியில் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating