யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் பலி…!!
மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.
கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு; அதிவேகமாக வந்துகொண்டிருந்த வேளையில்குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியின் மதிலுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தின் போதே சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளையாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Average Rating