41 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லபட்டையுடன் இரு இளைஞர்கள் கைது…!!
Read Time:1 Minute, 9 Second
41 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லபட்டையுடன் இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் 55 கிலோ 600 கிராம் நிறையுடைய வல்லப்பட்டையினை இலங்கையில் இருந்து காலை 4 மணிக்கு மும்பை ஊடாக சார்ஜா செல்லவிருந்த விமானத்தில் கடத்தி செல்ல எத்தணித்த வேளையில் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு முகத்துவாரம் மற்றும் நீர்க்கொழும்பு பகுதியினை சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை கைது செய்த சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating