துடித்து கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் பலி…!!
வீட்டில் தங்கியிருந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மில்லினிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சிப்பாய் குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
இலக்கம் 198 குருகொட, கல்பான என்ற முகவரியில் உள்ள வீட்டிற்கு நேற்று மாலை சென்று, இரவு உணவை சாப்பிட்டு விட்டு, இராணுவ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கான உடைகளை அருகில் வைத்து கொண்டு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.
அதிகாலை துடித்து கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த சிப்பாயை அவரது மனைவி, தாயின் உதவியுடன் கல்பாத வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.
உயிரிழந்த சிப்பாயின் மரண விசாரணைகளை கல்பாத திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் ஹொரணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating