பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்….!!
Read Time:1 Minute, 2 Second
பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் உள்ள நீரத் தடாகத்தில் விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த நபர் கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating