கோட்டைக்கல்லாறில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

Read Time:1 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை நகரிலிருந்து ஏறாவூர் நகரினை நோக்கி பணித்த சிறிய டிப்பர்(வடி) வாகனமும் கனரக லொறி ஒன்றும் மோதியதனால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கோட்டைக் கல்லாறு பாலத்திற்கு அருகாமையில் நடைபெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த தாமரைக்கேணி ஹிஸ்புல்லா நகர் ஏறாவூரினைச் சேர்ந்த 25வயதுடைய புகாரி முகமது நஷிம் மற்றும் 21வயதான மொஹமட் அஜிமல் ஆகியோர் 3.45 மணியளவில் சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது…!!
Next post உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்…!!