சிகரெட் கடத்தி வந்த சீன பெண் கைது…!!
Read Time:1 Minute, 5 Second
சீனாவிலிருந்து இலங்கைக்கு சட்டவீரோதமாக 48 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த சிகரெட் தொகையினை கொண்டுவந்த சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு இன்று காலை 8 மணிக்கு வருகை தந்த சீன பெண்ணொருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பெண் சீனாவில் குங்மின் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என்று விசாரணையில் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating