பிளஸ்-1 மாணவியை கற்பழித்து எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது…!!

Read Time:2 Minute, 3 Second

201610221303342709_plus1-student-arrested-for-trying-to-kill-a-young-man_secvpfகளியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (வயது 23). இவர், அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து பிளஸ்-1 மாணவி ஒருவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி தீக்காயங்களுடன் வீட்டின் பின் பகுதியில் உள்ளகிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாஜிஸ்திரேட்டும் மாணவி அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.

அதில், மாணவி தன்னை வாலிபர் விஜின் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் விஜினுடன் தகராறு செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜின் தன்னை எரித்துக் கொல்ல முயன்றதாகவும் கூறினார்.

மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜினை தேடி வந்தனர். நேற்று அவர், திருவனந்தபுரம் பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நள்ளிரவில் யானையை பார்த்த அதிர்ச்சியில் பெண் பலி…!!
Next post இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்…!!