பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது…!!

Read Time:1 Minute, 49 Second

201610230745056322_priest-arrested-for-school-student-molested_secvpfதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி பாதிரியாராக ஜோசப்அந்தோணி கிஷோர் (வயது 31) என்பவர் இருந்தார். அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்.

பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ஏமாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த உதவி பாதிரியார், திண்டுக்கல் ஆயர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவளது பெற்றோர் நேற்று, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பாதிரியார் ஜோசப் அந்தோணி கிஷோரை கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த மாணவி, தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் பொலிஸ் உடையில் உலாவிய மர்ம நபர் கைது…!!
Next post ஏலகிரி மலைப்பாதையில் சென்னை சுற்றுலா பயணிகளின் வேன் தீப்பிடித்து எரிந்தது…!!