வாழைச்சேனையில் வீடு தீக்கிரை! வீடின்றி அம்மா வீட்டில் தஞ்சம்…!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் குடிசை வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் வசிக்கும் திருமதி மோகன் கவிதா என்பவரின் குடிசை வீடே இவ்வாறு தீயில் முற்றாக எரிந்துள்ளது.
இது பற்றி திருமதி மோகன் கவிதா கூறுகையில், இரவு வேளையில் எனது அம்மாவின் வீட்டிற்கு தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதற்கு சென்றிருந்தார். இதே வேளை சுவாமி படத்திற்கு விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. விளக்கில் இருந்த திரியை எலி எடுத்துக் கொண்டு ஓலையில் போட்டமையினால் வீடு முற்றாக எரிந்துள்ளது.
பின்னர் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டறிந்து அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதன் போது உடைகள், உடமைகள், துவிச்சக்கர வண்டி, கல்வி உபகரணம், சிறு தொகைப் பணம், தொலைபேசி உட்பட்ட பல பொருடகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதன் காணரமாக வீடு முற்றாக எரிந்துள்ளமையால் இருப்பதற்கு இடமின்றி எனது அம்மாவின் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கல்வி உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி என்பன முற்றாக எரிந்து நாசமாகியதால் எனது மகனின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எனது கணவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார். நான் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலே வாழ்ந்து வருகின்றேன். இப்போது எனக்கு இருப்பதற்கு வீடோ அல்லது மகனின் கல்விக்கு ஏதும் உதவிகளோ வழங்க முன் வந்து உதவி வழங்குங்கள் என திருமதி மோகன் கவிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தோடு இவ்விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமை பார்வையிட்டதுடன் சிறு தொகைப் பண உதவி வழங்கியதுடன் தன்னாலான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
Average Rating