வாள்வெட்டுக்கு இலக்கான பொலிஸார் தொடர்பில் மருத்துவமனையின் பணிப்பாளர்…!!
யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான பொலிஸாருக்கு பாரிய காயங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீ பவானந்தராஜா இது தொடர்பில் கொழும்பு செய்திச் சேவை ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைக்கு பொலிஸார் இருவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பாரதூரமானவையோ, கடுமையான காயங்களோ அல்ல. எனினும் தொடர்ந்தும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வாள்வெட்டு சம்பவம் காரணமாக சுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த பதற்றம் தற்போது ஓரளவுக்குத் தணிந்துள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating