யாழில் மர்மப்பொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் பலி ஒருவர் படுகாயம்…!!

Read Time:1 Minute, 37 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4யாழ். கிளாலி பிரதேசப் பகுதியில் இன்று பகல் 12.30 மணியளவில் மர்மப் பொருள் (வெடிபொருள்) வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கிளிநொச்சி கிளாலி முன்னரங்கப்பகுதியில் மாடுகளை பார்க்க சென்ற இரண்டு பேர் மாடுகளைத் தேடி சென்றபோது வெடிபொருளில் சிக்கியுள்ளார்கள்.

சம்பவத்தில் ஒருவர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அறத்திநகர் கிளாலியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா ராஜாவே உயிரிழந்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியம் பகீரதன்(38) என்பவர் படுகாயமடைந்தவராகவும் இனங்காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மரணம்…!!
Next post குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூர தாய்க்கு விளக்கமறியல்…!!