இலங்கைப் பெண்ணின் மரணத்தில் மர்மம்! உறவினர்கள் முறைப்பாடு…!!

Read Time:2 Minute, 6 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4குவைத் நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்த நிலையில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான நிலுகா நில்மினி என்ற இந்த பெண் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி குவைத் நாட்டுக்கு சென்றார்.

குறித்த பெண் இந்த மாதம் ஆரம்பித்து சில நாட்களுக்கு பின்னர் தனது மகளுடன் பேசவில்லை.

இந்த நிலையில், நிலுகா தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நிலுகாவின் நண்பிகள் என கூறப்படும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு நபர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரியப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர பெண்ணின் கணவரின் விருப்பம் அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ள போதிலும், பெண்ணை கைவிட்டு வெளிநாட்டில் இருக்கும் கணவர் அனுமதியை வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சிறுநீரகங்களை வைத்தியசாலை ஒன்றுக்கு வழங்க விரும்புவதாக பிள்ளைகள் கடிதம் அனுப்பினால்தான் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்படும் என அந்த நபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், அது பற்றி விசாரணை நடத்துமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் பலியாகிய நான்கு இளைஞர்கள் – விபரம் வெளிவந்தது…!!
Next post மதுபான போத்தல்களுடன் பாடசாலை மாணவிகள்! மூடிமறைத்த அதிபர்…!!