மதுபான போத்தல்களுடன் பாடசாலை மாணவிகள்! மூடிமறைத்த அதிபர்…!!
Read Time:1 Minute, 13 Second
தென் மாகாணத்திலுள்ள பாடசாலையில் வைத்து மதுபானம் அருந்திய பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையை விட்டு இடை நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வகுப்பு அறையினுள் வைத்து மதுபானம் அருந்தியத்துடன், மோசமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தினை மறைப்பதற்கு பாடசாலை அதிபர் முயற்சித்ததாகவும், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தகவலினை வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
தரம்11 இல் கல்வி கற்கும் மாணவிகள் 13 மதுபான போத்தல்களை வகுப்பறைக்கு கொண்டு வந்ததாகவும், இதன் போது ஒரு மாணவியின் கையில் இருந்த மதுபான போத்தல் கீழே விழுந்த போது ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டு ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating