இன்று சுலக்சனின் இறுதி சடங்கு…!!
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.
இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று பிற்பகல் மாணவனது இல்லத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனின் பூதவுடன் அவரது வீட்டிலிருந்து இன்று பிற்பகல் எடுத்துச் செல்லப்பட்டு உடுவில் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கிளிநொச்சி 155 ஆம் கட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜனின் பூதவுடன் நேற்று பாரதிபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating