கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு! நன்மைகளோ ஏராளம்…!!

Read Time:3 Minute, 17 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் ஜூஸ் வகைகளும் உள்ளது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் உடன் இஞ்சி சாற்றை கலந்த பானத்தை குடித்து வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்த பானத்தைக் குடிப்பதால், அந்த ஜூஸில் உள்ள சத்துக்கள் நம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை வலிமைப்படுத்துகிறது.

கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கேரட் மற்றும் இஞ்சியில் உள்ள சத்துக்களால் நம் உடம்பில் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

கேரட் மற்றும் இஞ்சி சாறு கலந்த இந்த இயற்கை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும் உணர்வைக் குறைக்கிறது.

கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.

கேரட் மற்றும் இஞ்சி ஜூஸில் உள்ள சத்துக்கள், இதயத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் இந்த இயற்கை வகை பானமானது, வாயில் எச்சியின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சி ஏற்படுவதை தடுத்து, வாய் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை…!!
Next post பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்…!!