லொறி விபத்து : சாரதி காயம்…!!

Read Time:1 Minute, 54 Second

201607251948009211_10-killed-in-bus-auto-collision-in-bihar_secvpfபொலனறுவை மாவட்டம் வெலிகந்த – கடவத்தமடு பகுதியில் கொழும்பு பிரதான வீதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் இருந்து காத்தான்குடியை நோக்கி செல்லும்போது வெலிகந்த – கடவத்தமடு எனும் இடத்தில் லொறியின் முன்பக்க சில்லு ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையும் இழந்த நிலையில் பிரதான பாதையில் இருந்து சற்று விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

அருகில் உள்ள கிராம வாசிகளும் பாதையால் பயணித்தவர்களும் இணைந்து விபத்துக்குள்ளான லொறியில் இருந்து சாரதியையும் உதவியாளரையும் மீட்டுள்ளனர்.

அதில் லொறியின் சாரதியான காத்தான்குடி முஹம்மது அஜ்மல் என்பவரே காயமடைந்த நிலையில் உடனடியாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள எம்.ஐ.எம் ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான லொறி சீனி கொள்வனவு மேற்கொண்டு வரும்போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு…!!
Next post தெல்தோட்டையில் ஆசிரியர் மீது தாக்குதல்…!!