வீதியை விட்டு விலகி மரத்தை மோதிப்பார்த்த வேன்..!!
Read Time:1 Minute, 3 Second
வவுனியா தாண்டிக்குளம் கண்டிவீதியில் இன்று வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் டொல்பின் ரக வாகனம் வீதியியை விட்டு விலகிச்சென்று மரம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. எனினும் விபத்து ஏற்பட்ட வேன் பலத்த தேசமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலே மரத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating