திருமணம் செய்யுமாறு கூறிய தந்தையை கொலை செய்த மகன்..!!

Read Time:1 Minute, 36 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமை.

அது மாத்திரமல்ல பிள்ளைகள் திருமணம் செய்து வைப்பது பெற்றோருக்கு மனதுக்கு ஆறுதலை தரும் விடயமாகும்.

எவ்வாறாயினும், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தயாரான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா மீரிகம பிரதேசத்தில் நடந்துள்ளது.

28 வயதான மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் யோசனையை முன்வைத்ததால், மகன் தந்தையை பொல்லினால் தாக்கியுள்ளார்.

அந்த தாக்குதலில் 55 வயதான தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேகநபரான மகனை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதியை விட்டு விலகி மரத்தை மோதிப்பார்த்த வேன்..!!
Next post யாழ்.பல்கலை மாணவன் சுலக்ஷனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது…!!