யாழ்.பல்கலை மாணவன் சுலக்ஷனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது…!!

Read Time:1 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவினின் சொந்த ஊரான அளவெட்டி கந்தரோடைப்பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சமய கிரிகைகள் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் மாணவனின் பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பிரமுகர்களும் இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவனின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து கே.கே.எஸ் வீதியில் சுன்னாகம் மருதனார்மடம் ஊடாக உடுவில் மருதம் பொது மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைவாக நல்லடக்கம் செய்யப்பட்டது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்யுமாறு கூறிய தந்தையை கொலை செய்த மகன்..!!
Next post திருகோணமலையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி…!!