திடீரென ஒன்று குவிந்துள்ள பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்! கிளிநொச்சியில் பதற்ற நிலை…!!

Read Time:1 Minute, 41 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாகி இருந்தது.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் ஒன்று பரவியதை அடுத்து கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதிதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, திடீர் என பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் கிளிநொச்சி மாவட்ட குழுவினர் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கேட்டதற்கு அமைவாக குறித்த ஆடைத் தொழிற்ச்சாலைகள் 12 மணியளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு…!!
Next post மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலி…!!